அவ்வபோது சென்னை, கடலூர் என தமிழகத்தில் கரையைக் கடந்து செல்கின்றன சில புயல்கள். அவற்றிக்கு பெயர்களும் சூட்டப்படுகிறது கடந்த சில வருடங்களாக. அவற்றின் பெயர்கள் – லைலா, நிலம், தானே, வர்தா. நாம் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளவே புயல்களுக்கு பெயர்களிடப்படுவதாக நான் கருதுகிறேன்.
இந்த முறை வந்திருக்கும் புயலோ பெயரைக் குறிப்பிடாமலே நினைவில் நிற்கும் அளவிற்கு வேலையைக் காண்பித்துப் போயிருக்கிறது. இதற்கு முன்னர் வந்த தானே புயலின் தாக்கம் பெரிது என்றால், வர்தாவின் தாக்கம் அதுக்கும் மேல! புயலின் மையக் கண் சென்னைக்கு மிக அருகில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓலமிட்டுக் கரையைக் கடந்ததால்.
வானிலை ஆய்வாளர்கள், மழையை கணிப்பவர்கள், நிபுணர்கள் என பலரது கருந்து 1994-ஆம் ஆண்டிற்கு பின் வரும் மிகப் பெரிய புயல் இது என்றும், வரலாறு காணாத அளவுக்கு வலுமை வாய்ந்ததாக வர்தா இருக்கின்றது என்றும் கணித்தனர். சென்ற ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் இந்த முறை மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தனர். காரணம், கடந்த ஆண்டு பெய்த வரலாற்று மழை ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு சிறு அச்சத்தை விதைத்து விட்டுச் சென்றது. அதன் விளைவாக நம் ஊடகங்கள், அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொது மக்கள் அனைவரும்,
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர்.
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே புயலை கணிக்க உதவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.இத்தகையதொரு புயலை மக்கள் யாரும் உணராமல் இருந்திருந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.
என்னதான் முன்கூட்டியே நாம் புயலை கணித்து இருந்தாலும் கூட புயலின் வேகத்தை எவராலும் நிறுத்த முடியாது. அதுவே இயற்கைச் சீற்றம். நாம் சிறு வயதில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட பயன்படுத்திய மரமாக இருந்தாலும், நமக்கு சுவையான மாங்காய்களை வாரி வழங்கிய மாமரமானாலும், வெயிலின் பொழுது அதன் நிழலில் நீண்ட நேரம் களைப்பாற்றியிருந்தாலும், நமது வீட்டிற்கு தினமும் வந்து உணவைச் சுவைத்துச் செல்லும் காக்கை, குறுவிகளின் வீடாக இருந்தாலும், புயலுக்கு இறையாக வேண்டியது தான்.
கடந்து சென்ற வர்தாவின் ஒரே நன்மை, மிகப் பெரிய நன்மை, இந்த வருடம் பெய்யாத பருவ மழை விட்டுச் சென்ற ஏரிகள் மற்றும் குளங்களின் வெற்றிடத்தை ஓரளவிற்காவது நிரப்பும் அதன் கன மழையே.
வர்தாவின் தீமைகள், வலுவான காற்றைக் கொண்டு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடர்பாடு செய்தது ஆகியவை. வேரோடு சாய்ப்பதற்கு மரங்களை விட்டு வைத்திருக்கின்றோமே என்று புன்னகைக் கொள்வோம். தினசரி அலச்சலுக்கு நடுவே ஒரு நாள் வாழ்வின் ஒரு அனுபவமாக கிடைத்ததே என்று பெருமிதம் கொள்வோம்.
வர்தாவின் தீமைகள், வலுவான காற்றைக் கொண்டு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடர்பாடு செய்தது ஆகியவை. வேரோடு சாய்ப்பதற்கு மரங்களை விட்டு வைத்திருக்கின்றோமே என்று புன்னகைக் கொள்வோம். தினசரி அலச்சலுக்கு நடுவே ஒரு நாள் வாழ்வின் ஒரு அனுபவமாக கிடைத்ததே என்று பெருமிதம் கொள்வோம்.
இப்போது விழுந்த மரங்களை அள்ளிச் சென்று சாலையில் போட்டதோடு நிறுத்தாமல் பல மரக்கன்றுகளையும் நடுவோம்.
அன்புடன்
ஜெகன்
ஜெகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக